ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

எங்கே எனது காதல்? - 3

Go to fullsize image

வெளிச்சத்தைத் தின்றுவிட்ட
இரவின் ஏப்பத்திணறலில்
வெளியே
வந்து விழுந்தது
வெள்ளி நிலா

உன் சொல் அம்பில்
நொறுங்கிப் போய்
சிதறிய கண்ணாடித் துகள்களாய்
என் இதயம்

Go to fullsize image

ஒவ்வொரு துகள்களிலும்
அந்த நிலா
உன்னைத்தான்
அடையாளம் காட்டியது

உன் நினைவு ஒளியில்
உருகும் மெழுகுவர்த்தியாய்
நான் கரைய...
அந்தச் சுடருக்குக் கீழே
தேங்கியக் குளமாய்
ஈரவிழிகளுடன் என் காதல்

Go to fullsize image

ஜப்பான்காரன் ஆட்சியில்
நம்மவர்களை மூட்டைக் கட்டி
சயாமிற்கு ஏற்றியதுபோல்
நீயும்
உன் காதலை மூட்டைக் கட்டி
சஹாரா பாலைவனத்தில்
எறிந்து விட்டாயோ...

இல்லை,

இப்போதிருக்கும்
வரலாற்று பாடங்களில்
மலாக்கா பரமேஸ்வரனை
மறைத்தது போல்

நீயும்
உன் காதலை மறைத்து விட்டாயோ..
அன்பே..
எறிந்தாலும் மறைத்தாலும்
காதல்
என்றும் பௌர்ணமி நிலவுதான்.

Go to fullsize image

- தேடல் தொடரும்.........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக