செவ்வாய், 20 செப்டம்பர், 2011

காதல் அழுவுது

Go to fullsize image

காதல் கண்களில்
தெறிக்கிறது
காதலின் விசும்பல்

காத்திருந்த காலங்களில்
கருப்பு வெள்ளையாய்
நம் நிழல்கள்

நீ நானானாய்
நான் நீயானேன்

நிகழ்காலங்களில்
கலர் கலராய்
நம் நிழல்கள்

நீ நீயானாய்
நான் நானானேன்

தியாகம்
எனப் பெயரிட்டு
காதலுக்கு அஞ்சலி செய்தோம்

உன் அவன்
என்னைவிடச் சிறந்தவன்
என் அவள்
உன்னைவிடச் சிறந்தவள்

தூரமாய்
ஒரு விசும்பல்....

'என்ன சத்தம் அங்கே?'

'காதல் அழுவுது'.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக