திங்கள், 26 செப்டம்பர், 2011

எங்கே எனது காதல்? - 4

Go to fullsize image

உன் பாதம்
பட்ட இடமெல்லாம்
கவிதைப் பூக்களால் அலங்கரித்தேன்

கதிரவனாய் உன் நினைவு
பனித்துளியாய் நான்

Go to fullsize image

காதல்
வெறும் ஆசைகள் அல்ல
இதயத்தில் எழும் உயிரோசைகள்

காதலின் குரல்
நெறிக்கப்பட்டதால்
நெஞ்சமெல்லாம்  காயங்கள்

Go to fullsize image

பாண்டியன் சபையில்
கண்ணகியின் வீச்சில்
சிதறிய காற்சிலம்பாய்
என் காதல்.


பல
சூரிய கிரணங்களும்
சந்திர கிரணங்களும்
வந்து போகலாம்
ஆனால்
நட்சத்திரத் தாரகைகளின்
நடுவே நடைபயிலும்
நிலவு
என்றும் ஒன்றுதான்

நீயும் அப்படித்தான்.

Go to fullsize image

- தேடல் தொடரும்...........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக