திங்கள், 26 செப்டம்பர், 2011

எங்கே எனது காதல்? - 5

Go to fullsize image

உன் பார்வை வீச்சில்
தொலைந்தேன்
காதல் விளிம்பில்
விழுந்தேன்

சூரியத் தூரிகைகளால்
இதய வானவீதியில்
காதல் வண்ணக்கலவையை
வானவில்லாய்த் தெளித்த
பெண் சிற்பி நீ

Go to fullsize image

ஒவ்வொரு இரவின் நுனியிலும்
காதல் கரையான்களால்
தின்னப்படுகின்றன
என் நம்பிக்கைகள்

என் விழி கடிதத்தின்
வார்த்தைக் கோப்புகள்
உன் விழிக்கிணற்றுக்குள்
மூழ்கிக் கிடக்கின்றன

உன் இதயச் சிற்பிக்குள்
இன்னமும் மூடிய முத்தாய்
என் காதல்

Go to fullsize image

காதல்வாசல் கண்களுக்குள்
காய்ச்சல்

நெருப்பாய் நான் சுடுகிறேன்.

இவை
என் மனம் மென்றுத்துப்பிய
வார்த்தைக் குப்பைகள் அல்ல
என் உயிர் அசைவுகளின் அணுக்கள்

உன் விழிகளில் படிவது
எழுத்துகள் அல்ல

என் கடைசி சுவாசம்.

என்னை நீ சந்திக்காவிட்டாலும்
என் எழுத்துகள் உன்னைச் சந்திக்கும்

நாளைய வரலாற்றில்
உன் இதயமே
என் கல்லறை தாஜ்மஹால்

Go to fullsize image

அன்பே...அன்புடன்....அன்பிற்காக....................

 - தேடல் தொலைந்தது.

எங்கே எனது காதல்? - 4

Go to fullsize image

உன் பாதம்
பட்ட இடமெல்லாம்
கவிதைப் பூக்களால் அலங்கரித்தேன்

கதிரவனாய் உன் நினைவு
பனித்துளியாய் நான்

Go to fullsize image

காதல்
வெறும் ஆசைகள் அல்ல
இதயத்தில் எழும் உயிரோசைகள்

காதலின் குரல்
நெறிக்கப்பட்டதால்
நெஞ்சமெல்லாம்  காயங்கள்

Go to fullsize image

பாண்டியன் சபையில்
கண்ணகியின் வீச்சில்
சிதறிய காற்சிலம்பாய்
என் காதல்.


பல
சூரிய கிரணங்களும்
சந்திர கிரணங்களும்
வந்து போகலாம்
ஆனால்
நட்சத்திரத் தாரகைகளின்
நடுவே நடைபயிலும்
நிலவு
என்றும் ஒன்றுதான்

நீயும் அப்படித்தான்.

Go to fullsize image

- தேடல் தொடரும்...........

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

எங்கே எனது காதல்? - 3

Go to fullsize image

வெளிச்சத்தைத் தின்றுவிட்ட
இரவின் ஏப்பத்திணறலில்
வெளியே
வந்து விழுந்தது
வெள்ளி நிலா

உன் சொல் அம்பில்
நொறுங்கிப் போய்
சிதறிய கண்ணாடித் துகள்களாய்
என் இதயம்

Go to fullsize image

ஒவ்வொரு துகள்களிலும்
அந்த நிலா
உன்னைத்தான்
அடையாளம் காட்டியது

உன் நினைவு ஒளியில்
உருகும் மெழுகுவர்த்தியாய்
நான் கரைய...
அந்தச் சுடருக்குக் கீழே
தேங்கியக் குளமாய்
ஈரவிழிகளுடன் என் காதல்

Go to fullsize image

ஜப்பான்காரன் ஆட்சியில்
நம்மவர்களை மூட்டைக் கட்டி
சயாமிற்கு ஏற்றியதுபோல்
நீயும்
உன் காதலை மூட்டைக் கட்டி
சஹாரா பாலைவனத்தில்
எறிந்து விட்டாயோ...

இல்லை,

இப்போதிருக்கும்
வரலாற்று பாடங்களில்
மலாக்கா பரமேஸ்வரனை
மறைத்தது போல்

நீயும்
உன் காதலை மறைத்து விட்டாயோ..
அன்பே..
எறிந்தாலும் மறைத்தாலும்
காதல்
என்றும் பௌர்ணமி நிலவுதான்.

Go to fullsize image

- தேடல் தொடரும்.........

எங்கே எனது காதல்? - 2

Go to fullsize image

அன்று
நெஞ்சில் பூவாய்ப் பூத்தாய்.
இன்று ஏனோ...
தீப்பிழம்பாய் சிவந்தாய்

எரிமலையின் லாவாக்களாய்
தேள்வார்த்தைகளைக் கொட்டினாய்
வெயில் பட்ட மண்புழுக்களாய்
மனம் நெளிந்தது.
காதல் வண்ணத்துப் பூச்சிகளாய்
உயிர் முழுக்க ஊர்ந்தது.

Go to fullsize image

உன்னைச் சந்திக்கும்
ஒவ்வொரு முறையும்
நான்
ஊமையாகிப்போகிறேன்

உன்னைப் புடவையில்
பார்க்கும்
ஒவ்வொரு பொழுதும்
வெள்ளியாய் நனைகிறது

Go to fullsize image

என் சந்தோஷங்களை
உனக்குள் ஒளித்து வைத்தாய்
என் புன்னகையை
உனக்குள் பூட்டி வைத்தாய்

கண்ணீரைக் கூட
நான் காயவிடுவதில்லை
ஒவ்வொருச் சொட்டிலும்
உன் முகம்
புதைந்துக் கிடக்கிறது.

Go to fullsize image

காயாத கண்ணீருடன்
ஒலிம்பிக் தீபமாய்
காதல் சுமைகளை
ஏந்திக் கொண்டு
என் நினைவுக்கழுதை
காதலின் முகவரியைத் தேடி
உன்னைச் சுற்றியே வட்டமடிக்கிறது.

- தேடல் தொடரும்................

எங்கே எனது காதல் - 1

Go to fullsize image

காதலைத்தேடி
வார்த்தைகளைத் தோண்டுகிறேன்
முகம் தெரியாத முகத்துக்காக
என் முகத்தைத் தொலைத்துவிட்டு

வெண்ணிலவைத் தொலைத்த
வானத்தின்
கீழே நின்று தேடுகின்றேன்
என் காதலை

அண்டார்டிகா பனிப்பாறைகளாய்
எங்கும்
வெள்ளை காதல் சமாதிகள்

ஆப்கானிஸ்தானின்
தலிபான் ஆட்சியாளர்களால்
இடிக்கப்பட்ட புத்தனின் சிலையாய்
என் கனவுகள்

Go to fullsize image

உன் நினைவின் நெருப்பு
என்னை எரித்துக் கொண்டிருக்கிறது

Go to fullsize image

தெருவோரத்துக் கவிதைக் குப்பைகளாய்
உன் காதலும்
சாம்பலாகிக் கரைந்து கொண்டிருக்கிறதா?

யார் யாரோ
பரிதாபப் பார்வை வீச...

என் தவம்
உன்னொருவளின்
உயிர்ப்பார்வைக்கு மட்டும்தான்.

என் உயிரின் சாய்மானம்
உன் காதல்.
அதை யார் கீழே தள்ளியது?

கூழாங்கற்களை உரசிப்பார்.
தீ கருவுயிர்க்கும்.
என் மனசை உரசிப் பார்.
நயாகரா நீர்வீழ்ச்சியாய்
கவிதைத் துளிகள் கொட்டும்.
ஒவ்வொரு துளிகளிலும்
உன் நினைவுகள் தெறிக்கும். 

Go to fullsize image

- தேடல் தொடரும்....




புதன், 21 செப்டம்பர், 2011

வலி மட்டும் வாழ்க்கை

புகைப்படம் 
மேகங்களை ஆரத்தழுவும்
இரட்டைக் கோபுரத்தைப்
பார்க்கும் போதெல்லாம்
கண்களில்
நிற்பது என்னவோ
ரப்பர் தோட்டங்களும் ஈய லம்பங்களும்தான்

பிரமாண்டமான புத்ரா ஜெயாவில்
பார்க்கும் இடமெல்லாம்
எங்கள் உழைப்பின் கல்லறைகள்

வாழ்ந்த
சுவடுகளின் மிச்சம்
அங்கும் இங்கும்...
ஒற்றைக் கோபுரமும்,
நாலு கால் தகரக் கூரைகளும்தான்.

இன்றோ நாளையோ
அதுவும் உடைபடலாம்.

உழைப்பும் போராட்டமும்
தியாகங்களும்...
வந்தேறிகள் என்ற போர்வைக்குள்
மறைக்கப்பட்டு விட்டன.

ஓர் இந்தோனிசியனைப் போல்
ஒரு பங்களாதேசியனைப் போல

நாங்களும் வந்தேறிகளாம்.

பதில் தெரியவில்லை
வழி தெரியவில்லை
வாழ்க்கை முழுவதும்
வலி மட்டும் வியாபித்திருக்கிறது.
Prime Minister Office at Putrajayaprime minister's office  (布特拉再也 . 首相府)