புதன், 1 பிப்ரவரி, 2012

காதல் வலிகள்




என் அறையில் நான் மட்டும் தனியே
பாடல் கேட்டேன்
நீயும் நானும் ரசித்து ரசித்து கேட்ட
அந்தப் பாடல்
நினைவுகளை அறைகிறது
நம் முதல் சந்திப்பு
அதிர்ந்து கீழே விழுகிறது

நானும் நீயும் சேர்ந்து எடுத்துக்கொண்ட
அந்த முதல் படம்
கலர் மங்கிப்போய்
என் முன்னால்......
விழிச் சாரல்களில் நனைகிறது

எத்தனை சந்தோஷம் அன்று

உன்னோடு பேசியது பாடியது நடனமாடியது
உன்னோடு சண்டை போட்டது
என் விரல்களைப் பிடித்து
உன் இதயத்தோடு வைத்துக்கொண்டது
குடையிருந்தும்
என்னோடு மழையில் நனைந்தே நடந்தது

எல்லாம் தொலைந்துபோனது

பழகிய ஐந்து ஆண்டுகள் நேற்றைப்போல்
பழசாகிப் போனது
ஆம் போனது போனதுதான்
நம் காதலைப்போல்

போனது காதல்தான்
இதயம் அல்ல

உன் சொல்
உன் வார்த்தை
மறக்கக்கூடியவையா அவை

விழிகளில் ஒரு கவிதை
காத்திருக்கிறது
உன் வாசிப்பிற்காக...

இதழ்களில் ஒரு ஈரம்
தவிக்குது
உன் தொடுதல்களுக்காக....

காதலில் ஒரு பார்வை
ஏங்குது
உன் புன்னகைக்காக...

முழுமையாக நம்பினேன்
காதல் வலித்ததுதான் மிச்சம்.









1 கருத்து: