புதன், 22 பிப்ரவரி, 2012

குடை கிழிந்துகொண்டிருக்கிறது


Umbrella left behind...


தேவதாசிகள் கூடும்    
அந்தத் தெருவில்
உன் நினைவுகளைச்
சுமந்துகொண்டு
நடந்து கொண்டிருக்கிறேன்

உன் வார்த்தைகளை
என் மனதுக்குக் குடையாக்கி
நடந்து கொண்டிருக்கிறேன்

தேவதாசி ஒருத்தியின்
கொஞ்சலிலும் கெஞ்சலிலும்
பெரும்காற்று வீசுகிறது

நான்
உனக்கு உண்மையாக இருக்கவே
விருப்பப்படுகிறேன்
ராமனும் கிருஷ்ணனும்
என்னைப்பார்த்து சிரிக்கின்றனர்

என் இதயத்தில்
உன் முகம்
அமிழ்ந்த தடம்
வெற்றிடமாய்
காற்றில் மிதக்கிறது

குடை கிழிந்துகொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக