திங்கள், 13 பிப்ரவரி, 2012

நான் நானாக இருப்பதில்லை




எதுக்காகவோ
யாருக்காகவோ
சில சமயங்களில் சமரசங்கள்
வாழ்க்கையின் அத்தியாவசியத்
தேவையாய் போய்விடுகின்றன

எங்கும் சமரசம்
எதிலும் சமரசம்

நான் நானாக இருப்பதில்லை
மற்றவர்களாய் மாறுகிறேன்
மற்றவர்களுக்காக

கண்ணாடியைப் பார்க்கும்போதெல்லாம்
என் சுயத்தை நான் இழக்கிறேன்
என் முகத்தில்
என் முகம் தெரியவில்லை
வேற்று முகங்கள்தான் சிரிக்கின்றன

என் சந்தோஷம்
என் துக்கம்
மற்றும் எனக்குள்ளும்
நான் நானாக இல்லை
வேறு யாரோவாக நான் பிரதிபலிக்கிறேன்

பிறந்தவுடன் சொன்னார்கள்
நான் அம்மா மாதிரி என்று
வளர்ந்தவுடன் என் அத்தை சொன்னாள்
அவள் அண்ணன் மாதிரி நான் என்று

இன்றோ
என் மகனைப் பார்த்து
என் மனைவி சொல்கிறாள்
அப்பா மாதிரியே பிள்ளன்னு

யாரின் முகத்தையோ குணத்தையோ
யார் மேலேயோ தினித்து தினித்து
தனி மனித அடையாளம்
இங்கு திவாலாகிவிட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக