ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

காதல் இன்னும் முழுப்பெறவில்லை......



உன் வார்த்தை
மின்னலாய்
உயிரைத் தொட்டது
சில்லென்று

முச்சந்திகள் இல்லை
இருட்டான இடம் இல்லை
கடற்கரை இல்லை
சினிமா இல்லை

காதல் முழுப்பெறவில்லை

உன் அன்பு
மழையின் நனையல்களில்
முத்து முத்தாய் கவித்துளிகள்
சிதறி விழுகின்றன
சின்னச் சின்னதாய்
ஈரமனத்தில்

இயற்கை
கடலலைகளைச் சபித்தாலும்
உன் அன்பு
கடலலைகளைக் காக்கும்

நீ மகாராணி
உன் மகுடத்தின் வெண்முத்தாய் நான்

நீ நிலா
அந்த நிலவின் ஒளிக்கீற்றாய் நான்

நீ நீலவானம்
உன் இதயத்தில் தவழும் வெண்மேகமாய் நான்

மிகப்பெரிய மாமலை நீ
கீழே விரியும்
பச்சைநிற பள்ளத்தாக்காய்
படற்கிறேன் உனது காலடியில் நான்

நான் தூய்மையான நதியாகி
மகாசமுத்திரமான உன்னிடம்
இளைப்பாற ஓடோடி வருகிறேன்

நான் கீழே விழும்பொழுதெல்லாம்
என் இதயத்தை
உன் கைகளால் தாங்கிக்கொள்கிறாய்

இரவு முழுவதும் உன் கனவு
பொழுது புலர்ந்தும் உன் நினைவு

காதல் இன்னும் முழுப்பெறவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக