சனி, 18 பிப்ரவரி, 2012

மணிமேகலையின் அழுகைகள் மட்டும்


Mother Nature Crying



நினைவுகளின் அழுகைகளில்
ஒரு காவியம்
இங்கே பிரசவிக்கப்படுகிறது

உண்மையின் அழுகைகளில்
ஒரு காப்பியம்
இங்கே புனையப்படுகிறது

கண்ணீரின் அழுகைகளில்
ஓர் இதயம்
இங்கே கதாபாத்திரமாக்கப்படுகிறது

பூக்களின் அழுகைகளில்
ஒரு பனிக்குவியம்
இங்கே பூத்துக்குலுங்குகிறது

தென்றலின் அழுகைகளில்
ஒரு புகைமூட்டம்
இங்கே தகர்த்தெறியப்படுகிறது

கடலின் அழுகைகளில்
ஓர் அலைக்கூட்டம்
இங்கே சுனாமியாக்கப்படுகிறது

பாஞ்சாலியின் அழுகைகளில்
ஒரு நம்பிக்கை
இங்கே வளர்க்கப்படுகிறது

கண்ணகியின் அழுகைகளில்
ஒரு பெண்மை
இங்கே புனிதமாக்கப்படுகிறது

மாதவியின் அழுகைகளில்
ஒரு மரபு
இங்கே புதைக்கப்படுகிறது

மணிமேகலையின் அழுகைகள் மட்டும்
இங்கே இன்னமும்
ஏனோ தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக