சனி, 18 டிசம்பர், 2010

கவிதை

ஊசலாடும் நேயங்கள்

பெருவிரைவு இரயில்
தூரத்தில் அசையும் போதே
எறும்புகளாய் ஊருகிறோம்

உள்ளிருப்பவன் வெளி சுவாசம்
எதிரலையாய் உள் சுவாசம்

ஒருவர் முதுகில் ஒருவர்
மனம் மட்டும் அந்நியமாய்
தொலைகிறது

இடம்தேடி
அலையும் விழிகள்
கயல்களாய்....
இல்லையெனில்
கொக்கின் தவம்

கைத்தொலைப்பேசியில்
கலையும் முகங்கள்

பி.எஸ்.பி.யில்
வெற்றுலகப் பிரவேசம்..

மடிக்கணினியில்
உலகச்சுற்றுலா...
அவசர அலுவல்கள்...

அருகில் துணை
சின்னதாய்
ஒரு தேடல்...
சில தொடுதல்கள் (நெருடல்கள்)
காதல் மாயையில்
பூப்பெய்யும் 

பல மொழிகள்
ஈரச்சந்தையாய்
காதில் விழுகின்றன..
நமது மொழி
நமக்கே மறந்துபோகிறது

சில தரவுகள்
பல பதிவுகள்
இங்கு
ஒவ்வொரு விநாடியும்
புதிதாய்ப் பூக்கின்றன

புறங்கள்
அழகாகிச் சிறக்கின்றன
அகங்களின் சருகுகளாய்
மனித நேயங்கள்.

                                   - சேகர்கவிதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக